குழந்தைகளின் நூறு மொழிகள்
மொழி, பண்பாடு, கல்வி குறித்த கட்டுரைகள் ச. மாடசாமி வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன. கல்வியிலும் கலாச்சாரத்திலும் பேச்சிலும் மொழியிலும் தட்டுப்பட்ட மேடுபள்ளங்களை அறிந்தது இந்த வெளிச்சத்தின் வழிதான். நான் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இந்த வெளிச்சத்தில் கிடைத்ததுதான். இது சன்னமான வெளிச்சம். இருந்தபோதும், இதன்மீது இருட்டு வந்து அடைந்தது இல்லை. பேச்சிலும், தோற்றத்திலும், அறிவாளித் தனத்திலும் மிகச் சாதாரணமாய்த் தெரிவோர் இடையறாமல் இந்த வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருக்கையில் இருட்டு எப்படி வரும்?… எளிய மக்களோடு கலக்கையில்தான் என் இறுக்கம் நெகிழ்கிறது. மெல்லக் கற்ற மாணவர்கள்தான் ஆத்மார்த்தமாய் என்னோடு நெருங்கி இருந்திருக்கிறார்கள். என்றென்றைக்கும்நம்பிக்கைக்குரிய அவர்களுக்காகவே நான் தொடர்ந்து பேசுகிறேன். எழுதுகிறேன். ச. மாடசாமி கல்வி,கலாச்சாரம்,மொழி,பேச்சு உட்பட சமூகத்தின் நிலப்பரப்பில் எத்தனையோ மேடு பள்ளங்கள். அவற்றை இனங்கண்டு பாதுகாப்பாய் சமூகத்தைச் சமன் செய்ய ஒரு வெளிச்சம் தேவையாயிருக்கிறது….
Read More